tag:blogger.com,1999:blog-3614880007306060261.post8294861166299298144..comments2023-09-09T05:29:11.341-07:00Comments on ந.பச்சைபாலன்: காதல் படிக்கட்டுகள்patchaibalanhttp://www.blogger.com/profile/11868957325840662917noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3614880007306060261.post-50570267121494362392011-02-18T08:05:53.968-08:002011-02-18T08:05:53.968-08:00விரிவான விளக்கத்திற்கு நன்றி பாலா...
முதல் ஹைக்கூ ...விரிவான விளக்கத்திற்கு நன்றி பாலா...<br />முதல் ஹைக்கூ பூச்சோங் ஆற்றில் விழுந்து இறந்த என் நண்பன் காந்தியை என் நினைவின் ஆழத்திலிருந்து மீட்டெடுத்தது.எம். சேகர்https://www.blogger.com/profile/09078493866031198235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3614880007306060261.post-38078207662032988942011-02-17T17:35:38.577-08:002011-02-17T17:35:38.577-08:00ஜப்பானில் எழுதப்படும் ஹைக்கூ 5,7,5 ஆகிய 17 அசைகளில...ஜப்பானில் எழுதப்படும் ஹைக்கூ 5,7,5 ஆகிய 17 அசைகளில் அமைந்திருக்கும். தமிழில் எழுதப்படும் ஹைக்கூ கவிதைகளில் அம்முறை பின்பற்றப்படுகிறதா எனக் கேட்கிறீர்கள். <br /><br />தமிழில் இம்முறை பின்பற்றப்படுவதில்லை. ஆனால், ஹைக்கூவின் ஆதார சுருதிகளாக இருக்கும் அதன் அடிப்படைக்கூறுகளைத் தமிழில் கொண்டு வருகிறோம். பலர் 5,7,5 என எண்ணியெண்ணி ஹைக்கூவின் அழகைத் தவறவிடுகிறார்கள். 5,7,5 அசைகள் இருந்தால் மட்டும் ஒன்று ஹைக்கூவாகிவிடாது. அதன் முக்கியக் கூறுகள்:<br /><br />1. இயற்கைக்கு மீளல் <br />2. எளிய உயிர்க்கு இரங்கல்<br />3. தந்திமொழிபோல் சுருக்கம்<br />4. கடைசி வரியில் பெயர்ச்சொல்<br />5. உவமை, உருவகம் போன்ற அணிகளை விடுத்தல்<br />6. பார்த்த காட்சியை மனகேமராவில் படம் பிடித்தல்<br />7. பருவகால மாற்றங்கள் மனத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பதிவு செய்தல்<br />8. புதிர், விடுகதை போன்றவற்றைத் தவிர்த்தல்<br />9. எல்லாவற்றையும் சொல்லி முடிக்காமல் வாசகனுக்கும் பங்கு வைத்தல்<br />10. எதையும் சொல்லாமல் வாசகனுக்குக் காட்சி மூலம் உணர்த்துதல்<br /><br />இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். 5,7,5 அசைகள் இல்லாவிட்டாலும் இதனைப் பின்பற்றி எழுதப்படும் கவிதைகளை ஹைக்கூவாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தமிழில் ஹைக்கூ என்ற பெயரில் புதிர், விடுகதைகளை எழுதி நம்மைச் சோதித்துவிடுகிறார்கள். <br /><br />இதோ சில ஹைக்கூக்கள்:<br /><br />கல்லூரி ஆல்பம்<br />ஆசையாய்த் திறந்தேன்<br />ஆற்றில் இறந்த நண்பன்<br /><br />சாலையோர அழுக்கு நீர்<br />தலைநனைக்கும்<br />குருவிகள்<br /><br />குப்பைகொட்ட வந்தவள்<br />தலை குனிந்தாள்<br />நதியில் தெரிந்தது முகம்<br /><br />உணவைக் கொஞ்சம் <br />சிந்தி உண்ணுங்கள்<br />எறும்புகள் வரும் நேரம்<br /><br />அகதி முகாமில்<br />பிறந்தநாள் சிறுவனுக்கு<br />விளையாட்டுத் துப்பாக்கி<br /><br />சோம்பல் மாணவன்<br />அழைத்துக் காட்டினேன்<br />பாறை இடுக்கில் செடி<br /><br />இன்னும் மனம் நிறைய ஹைக்கூக்கள்...<br />நிறைய சொல்லலாம் சேகர்patchaibalanhttps://www.blogger.com/profile/11868957325840662917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3614880007306060261.post-49291094940721002362011-02-16T16:34:07.760-08:002011-02-16T16:34:07.760-08:00தங்களின் நேரத்தை ஒதுக்கி விளக்கம் கொடுத்தற்கு நன்ற...தங்களின் நேரத்தை ஒதுக்கி விளக்கம் கொடுத்தற்கு நன்றி.<br />காதல் மனதின் இலக்கிய ஊற்றுகள்..<br />மனதுக்கு இதமாக உலா வருகின்றன..<br /><br />அண்மையில் ஒரு ஹைக்கூ கவிதைத் தொகுப்பில் ஹைக்கூ கவிதைக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது<br /><br />முதல் வரி - 5 அசைகள்<br />இரண்டாவது வரி - 7 அசைகள் <br />மூன்றாவது வரி - 5 அசைகள்<br /><br />இருக்கவேண்டும் எனவும், மேலும் மூன்றாவது வரியின் இறுதி வார்த்தை பெயர்ச்சொல்லில் அமைந்திருக்கவேண்டும் எனவும் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.<br /><br />தங்களின் கருத்து என்னவோ?எம். சேகர்https://www.blogger.com/profile/09078493866031198235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3614880007306060261.post-73601355410540051742011-02-16T07:09:22.177-08:002011-02-16T07:09:22.177-08:00கவிதைகளைக் கூர்ந்து பார்த்தமைக்கு நன்றி சேகர்.
எழு...கவிதைகளைக் கூர்ந்து பார்த்தமைக்கு நன்றி சேகர்.<br />எழுதும்போது நானும் யோசித்தேன்.<br /><br />1<br />‘நான் திரும்பிக்கொண்டிருக்கிறேன்<br />நீ வந்து கொண்டிருக்கிறாய்’ - இங்கே இருவர் ஒரே திசையில் போகின்றனர்.<br />ஒருவர் முன்னே போகிறார் (தேடுதலில் தோல்வியடைந்து)<br />-இன்னொருவர் பின்னால் பயணமாகி வருகிறார்(மனமாற்றம் அடைந்து) <br />ஒரே திசைதான் ஆனால், இனி இவர்களிடையே சந்திப்பு சாத்தியமில்லை என எண்ணினேன்.<br /><br />10<br />இங்கே அதையே மாற்றி யோசித்தேன்.<br />‘நான் திரும்பிக்கொண்டிருக்கிறேன்’ (அவள் திசையில் அவளை எதிர்நோக்கிப் போகிறேன்)<br />‘நீ வந்துகொண்டிருக்கிறாய்’ (அவளும் என்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறாள்)<br />எதிரெதிர் திசைதான். இங்கே சந்திப்பு சாத்தியமாகலாம். கடைசி நேர மனமாற்றத்தில் அது நிகழாமலும் போகலாம்.<br /><br />ஒரே வரிகள் இரண்டு பொருள்கள் தருவதை எழுதும்போது உணர்ந்து எழுதினேன்.<br /><br />9<br />‘நான் தேடுதலை முடித்துக்கொண்டு <br />புறப்படுகிறேன்<br />திரும்ப முடியாத பாதையில்’<br /><br />தேடுதல் முடிந்தது. இனி ஒன்றுசேர வாய்ப்பு இல்லை எனத் தெரிகிறது. <br />அவள்தான் இன்னமும் யோசிக்கிறாளே! நான் பயணம் போகும் பாதையில்<br />திரும்பிவரும் எண்ணம் இல்லை; வாய்ப்பும் குறைவு - என்பதைப் பதிவு செய்துள்ளேன்.<br /><br />இவற்றைத் தனித் தனி சித்திரங்களாக எண்ணி எழுதினேன்.<br />1, 10 கவிதைகளை விடுத்து மற்றவற்றில் ஒரே உடன்பாடான சிந்தனையை எண்ணவில்லை. அதனால்தான் முரண்பாடுகள். <br /><br />என் சிந்தனையைக் கிளறியதற்கு நன்றி சேகர்.patchaibalanhttps://www.blogger.com/profile/11868957325840662917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3614880007306060261.post-60433658019779650482011-02-15T19:55:29.097-08:002011-02-15T19:55:29.097-08:00ரப்பர் மரத்திலிருந்து பால் சொட்டுச் சொட்டாய் கொட்ட...ரப்பர் மரத்திலிருந்து பால் சொட்டுச் சொட்டாய் கொட்டுவதுபோல் உங்கள் காதல் மனதிலிலிருந்து கவிதை வரிகள் கொட்டிக்கொண்டிருக்கின்றன.<br /><br />ஆனால்..இக்கவிதையில் சில முரண்கள் தெரிவதாக நான் உணர்கிறேன்.<br /><br />1. பயணத்தின் எந்த புள்ளியிலும் இனி நாம் சந்திக்கமுடியாது<br />9. புறப்படுகிறேன் திரும்ப முடியாத பாதையில்<br />10. ஏதாவது ஒரு புள்ளியில் நம் சந்திப்பு நிகழலாம். நிகழாமலும் போகலாம்.<br /><br />கவிதையில் இந்த முரண்கள் இருப்பதற்கு சிறப்புக் காரணம் ஏதும் இருக்கிறதா?எம். சேகர்https://www.blogger.com/profile/09078493866031198235noreply@blogger.com