நம் குரல்

Monday, January 28, 2019

நறுமண இதழ்ப்பெண்ணே!

           
               95 வருட தமிழ் நேசன் நாளிதழ் 
                       நிறுத்தப்படுகிறது





லகின் மிகப் பழமையான தமிழ் நாளிதழ்களில் ஒன்றான தமிழ் நேசன் – கடந்த 95 ஆண்டுகளாக மலேசியத் தமிழ் வாசகர்களையும்சிங்கப்பூர் தமிழ் வாசகர்களையும் மகிழ்வித்த தமிழ் நேசன் – எதிர்வரும் ஜனவரி 31-ஆம் தேதியோடு நிறுத்தப்படுகிறது என்ற தகவல் தமிழ் ஆர்வலர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தகவல் செல்லியல் செய்தித்தளத்தில் வெளியாகியுள்ளது.

உலகமெங்கும் அச்சில் வெளிவரும் பத்திரிகைகள் கடும் வணிகப் பிரச்சனைகள் காரணமாக மூடப்பட்டு வரும் வரிசையில் தமிழ் நேசனும் இணைகின்றது.

நீண்ட காலமாக மலேசியாவில் தமிழில் வெளிவரும் ஒரே பத்திரிகையாக விளங்கிய தமிழ் நேசன் வெளிவந்த காலகட்டத்தில் பல தமிழ் நாளிதழ்களுடன் வணிக ரீதியான போட்டியை எதிர்நோக்கினாலும்தொடர்ந்து வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருந்தது.

பின்னர் 1960-ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில்தமிழ் முரசு என்ற பத்திரிகையுடன் போட்டியை தமிழ் நேசன் எதிர்நோக்கியது. தமிழவேள் கோ.சாரங்கபாணியால் தொடங்கப்பட்ட தமிழ் முரசுகால ஓட்டத்தில் மலேசியாவில் நிறுத்தப்பட்டுதற்போது சிங்கையில் மட்டும்அரசாங்கத்தின் ஆதரவில் வெளிவந்து கொண்டிருக்கும் ஒரே தமிழ்ப் பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

தமிழ் முரசு நாளிதழுக்குப் பின்னர் தமிழ் மலர் என்ற பத்திரிக்கை என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளையால் தொடங்கப்பட்டுதமிழ் நேசனுக்குப் போட்டியாக சில ஆண்டுகள் வெளிவந்தது. ஆனால்இஸ்லாம் மதத்தை தரக் குறைவாக விமர்சித்த குறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்ட காரணத்தால் தமிழ் மலர் உள்துறை அமைச்சால் நிறுத்தப்பட்டது.

சில மாதங்களுக்குப் பின்னர்தமிழ் மலர் நிறுவனம் “தினமணி” என்ற மற்றொரு புதிய பத்திரிகையை வெளியிட்டது. எனினும் அந்தப் பத்திரிகையும் கால ஓட்டத்தில் மூடுவிழா கண்டது.   (செல்லியல்)




No comments:

Post a Comment