நம் குரல்

Wednesday, March 5, 2014

ஓவியம் ரசித்தல்





அந்தக் ஓவியக் கண்காட்சியில்
சுவர்களில் பெரிதும் சிறிதுமாக
வரிசையாகி நின்ற ஓவியங்களை
பலர் ரசிக்கத் தொடங்கினார்கள்

அவர்களில் நீங்களும்
எதிர்பார்ப்போடு ஓவியங்களை
உற்றுப்பார்த்து ரசிக்க முயன்றீர்கள்

வர்ணக் கலவையில் பேசும்
அவற்றின் மௌனமொழிக்குக் காதுகொடுத்து
காட்சிகளின் அடர்த்தியைக் கண்களில் நிறைத்து
கோடுகளின் மீதூர்ந்து
இருண்மையின் அர்த்தம் தேடி
வேறு கோணங்களில் கண்கள் பதித்து
காட்சிகளுக்குப் பின்னால் பயணித்து
முகந்தெரியா ஓவியனின் மனம் துழாவி
உள்ளே நுழைய முயன்றனர் பலர்

சிலரால் எளிதில் உள் நுழைந்து
காட்சியோடு கலக்க முடிந்தது
சில ஓவியங்கள் சிலரை வன்மையாய்
தடுத்து நிறுத்தி வேடிக்கை காட்டின

நவீன கவிதைபோல்
நவீன ஓவியம் ரசித்தலும்
ஒரு கலை என்றுணர்ந்தவர்கள்
தொடர்ந்து உள்ளே நுழைய முயல்கிறார்கள்
மற்றவர்கள் பார்வைக்கு
வர்ணங்களின் கொண்டாட்டம் அன்றி
ஓவியங்கள் ஓவியங்களாகத் தெரிவதில்லை

1 comment:

  1. Dear Admin,
    You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

    To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல...
    நம் குரல்

    ReplyDelete