நம் குரல்

Sunday, March 14, 2010

வீடு



பாதை நெடுக புற்கள் மண்டி
சிமெண்டுத் தரை மண்ணிலில் புதைய
சாயம் வெளுத்த பலகை மக்கி
பச்சைத் தாவரம் எங்கும் பரவ
கலைந்து கிடந்த வீட்டின் முன்னே
நான் நின்றேன் தனியாக
மனைவி பிள்ளைகளோடு

என் முன்னே
இன்னும் நிறம் வெளுக்காத வீடு
படுத்துறங்கிய சிமெண்டுத் தரை
என் புத்தக அலமாரி
அழகான லயங்கள்
என்னோடு விளையாடும் தோழர்கள்
வாசலில் படுத்திருக்கும் நாய்
வீட்டுக்கு ஓடிவரும் செவல ஆட்டுக்குட்டி
சாயுங்கால பரபரப்பு மனிதர்கள்
இரவில் நிலா பார்க்கும் பிராஞ்சா
அப்பா, அண்ணனைக் கிடத்தி
கத்திக் கதறிய வாசல்..

என் கையைப் பிடித்து இழுத்து
மகள் கூறுகிறாள்:
“அப்பா, இந்த வீட்லயா இருந்தீங்க?
வாங்க போகலாம்”

No comments:

Post a Comment