அடர்ந்த தலைமுடியை
வெட்டி நறுக்கி
ஒப்பனையால் நேர்த்தியாக்கி
முகத்தில் தாடையில்
முளைத்த முடிகள்
வழித்தெடுத்து
வழவழப்பாக்கி
தலையைத் திருப்பி
சொடக்கு முறித்து
மசாஜ் செய்து..
கைகள் மிக லாவகமாய் இயங்க
இடையிடையே
உள்ளூர் வெளியூர் அரசியல் அலசி
வியப்பிலாழ்த்தும் நாவிதர்
ஒருநாள்
கடைமூடிக் காணாமல் போனார்
பியூட்டி பார்லரும்
நவீன முடித்திருத்தகங்களும்
பெருகிய காலத்தில்..
உண்மை...
ReplyDeleteநன்றி நண்பர்களே
ReplyDelete