நம் குரல்

Tuesday, February 4, 2020

முகம் - இலக்கிய இதழ்




டிசம்பர் 2005இல் முனைவர் ரெ.கார்த்திகேசுவும் எங்களில் சிலரும் இணைய, ‘முகம்’ முதல் இதழ் அறிமுக இதழாக 25 பக்கங்களில் வெளிவந்தது. எம்.ஏ.இளஞ்செல்வனின் இலக்கியப் பணியை நினைவுகூரும் வகையில் அவர் குறித்த படைப்புகள் அதனில் இடம்பெற்றன. கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய - சிங்கை இலக்கிய மாநாட்டின்போது (2005), தமிழ்ச்சீலர் மா.செ.மாயதேவன் முதல் இதழை வெளியிட்டுச் சிறப்பித்தார். எழுத்தாளர்களிடம் படைப்புகளைக் கேட்டுப் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கியதால் முதல் இதழோடு சிற்றிதழ் முயற்சியைக் கைவிட்டோம்.

14 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு, பிரசவ வைராக்கியம் கலைந்து, மீண்டும் ‘முகம்’ இரண்டாம் இதழ் விரைவில் மலர்கிறது.....
நண்பர்கள் பலரும் இணையும் இலக்கிய இதழ்.
உங்கள் இதய வாசல் நாடி வருகிறது.

No comments:

Post a Comment