நம் குரல்

Thursday, December 8, 2011

கடைசியாய் நிலா பார்த்தது



மாணவர்கள் கடைசியாய் நிலா பார்த்த
தங்களின் அனுபவத்தைச் சொல்லத் தொடங்கினர்:

“சார், போன மாசம் இராத்திரியில..”
“தெய்வத்திருமகள் படத்தில விக்ரம் காட்டுவாரு”
“படத்துல பாட்டுக்காட்சியில நிறைய பார்த்திருக்கிறேன்”
“புத்தகத்துலதான் இருக்கே சார்”
“ஓவியத்துல”
“பேஸ்புக்ல அழகழகா நிறைய இருக்கு”
“போன வாரம் சாப்பிட வெளியே போனப்ப”
“ஞாபகம் இல்ல சார்”
“சின்னப் பிள்ளையில அம்மா சோறு ஊட்டும்போது”

நிலாவுக்கும் அவர்களுக்குமான இடைவெளி
கூடியிருப்பது தெரிந்தது

தூக்கம் வெறுத்த நேற்றைய இரவில்
சாலையில் தனியாய் நடக்கையில்
துணையாய் வந்த நிலாவைக் கவனித்தேன்
முன்னைவிட நிலா எல்லாரையும் விட்டு
தூரத்தில்போய் நின்று கண் சிமிட்டியது

No comments:

Post a Comment