நம் குரல்

Thursday, December 15, 2011

முகம் தொலைத்தல்



முகம் மலர்த்தல் எளிது
சிறு புன்னகை, புன்முறுவல்
இதழ்களிடையே தவழவிட்டால் போதும்

முகம் சுளித்தல் எளிது
வாய் இதழ்கள் பிதுக்கி
கண்களில் சிறு வெறுப்பை
உமிழ்ந்தால் போதும்

முகம் மறைத்தல் எளிது
இரு கைகள் கொண்டு
முகத்தை மூடினால் போதும்

முகம் பார்த்தல் எளிது
கண்ணாடி அருகே சென்று
முகம் காட்டினால் போதும்

முகம் மாற்றல் எளிது
முகத்தின் அளவுக்கேற்ப
முகமூடி இருந்தால் போதும்

அவற்றினும் எளிது
முகம் தொலைத்தல்

முகநூலையே நாள்முழுக்க
பார்த்துக் கொண்டு
அதனிலேயே
மூழ்கியிருந்தால் போதும்


No comments:

Post a Comment