![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifnlVYQpkO8F6zfd7oNvnlHL-LVk8tA_0_TjpAQyjsiCG2vJmkvSZS0AYcpsNohSbLPEdZTjAdxS1Y-d-EFHPvnZvb_R1JR0PK_svlBndYH2ZnDSN3rKNaYV2vhgTi05E50xfKqwsX9sc/s320/52.jpg)
1
கவிதைச் சண்டையில்
தொடங்கினோம்
இப்பொழுது
நம் கைகளில்
கற்கள்
2
உடுத்திக்கொண்டிருந்த
ஒவ்வொன்றையும்
அவிழ்க்கத் தொடங்கினேன்
கலைந்து கிடந்தன
புகழ்நனைத்த சொற்களும்
அர்த்தமில்லாப் பயமும்
பிம்பம் பற்றிய அலட்டலும்
இன்ன பிறவும்
3
எப்போதாவது நீ
இரையாய் விட்டெறியும்
சில அன்புமொழிக்காக..
விட்டுவிடுபட நினைத்தும்
மீண்டும் மீண்டும் வந்து
மண்டியிடுகிறேன்
உன் மனக்கூண்டில்
4
ரகசியங்கள் நிரம்பி வழியும்
குளியலறையின் தனிமையில்
எண்ணச் சிதறல்கள்
பொங்கிப் புறப்பட்டுத்
தலைதொடங்கி கீழ்நோக்கி
உணர்வு வளைவுகளில் தவிழ்ந்து
உணர்ச்சி நரம்புகளை நனைத்துப் பரவி
சொற்களாய் நீர்க்கோலமிட்டு
தரையெங்கும் கொட்டிக்கிடந்து
இருகைகளால் அள்ளி ஆராதிக்க
கண்சிமிட்டி இழுக்கிறது
அழகிய கவிதையாய்..
பார்த்தேன்,படித்தேன், ரசித்தேன் !
ReplyDeleteநன்றி !